sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை 5 நாளில் 36,000 பேர் 'அட்மிஷன்'

/

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை 5 நாளில் 36,000 பேர் 'அட்மிஷன்'

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை 5 நாளில் 36,000 பேர் 'அட்மிஷன்'

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை 5 நாளில் 36,000 பேர் 'அட்மிஷன்'


ADDED : மார் 07, 2024 11:54 AM

Google News

ADDED : மார் 07, 2024 11:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அரசு பள்ளிகளில், ஐந்து நாட்களில், 36,000 மாணவ - மாணவியர் புதிதாக சேர்ந்துள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், ஜூன் முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

ஆனால், அதற்கு முன்னதாக தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து விடுவதால், பெரும்பாலான மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேருவது வழக்கம்.

இந்நிலையில், அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், நடப்பு கல்வியாண்டு முதல் மார்ச் மாதத்திலேயே மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டு உள்ளது. கடந்த, 1ம் தேதி முதல் 6ம் தேதி வரையிலும், ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற ஐந்து நாட்களில், 35,809 மாணவ - மாணவியர் புதிதாக சேர விண்ணப்பம் அளித்துள்ளனர். இவர்களில், பெரும்பாலானவர்கள் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்துள்ளனர்.

வரும் நாட்களிலும், மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தும் வகையில், ஆசிரியர்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார்.






      Dinamalar
      Follow us