sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 'டெட்' 2ம் தாள் தேர்வு 41,515 பேர் 'ஆப்சென்ட்'

/

 'டெட்' 2ம் தாள் தேர்வு 41,515 பேர் 'ஆப்சென்ட்'

 'டெட்' 2ம் தாள் தேர்வு 41,515 பேர் 'ஆப்சென்ட்'

 'டெட்' 2ம் தாள் தேர்வு 41,515 பேர் 'ஆப்சென்ட்'


ADDED : நவ 17, 2025 01:27 AM

Google News

ADDED : நவ 17, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வான, 'டெட்' இரண்டாம் தாள் தேர்வில், 41,515 பேர் பங்கேற்கவில்லை.

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, நாடு முழுதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர, 'டெட்' எனும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம், 'டெட்' தேர்வுகளை நடத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான டெட் தகுதித் தேர்வு, நவ., 15, 16ம் தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக, 4 லட்சத்து 80,808 பேர் விண்ணப்பித்தனர்.

இடைநிலை ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' முதல் தாள் தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. இத்தேர்வை எழுத, 1 லட்சத்து 7,370 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 92,412 பேர் மட்டுமே பங்கேற்றனர். 14,958 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், பட்டதாரி ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' இரண்டாம் தாள் தேர்வு, 1,241 மையங்களில் நேற்று நடந்தது. 3 லட்சத்து 73,438 பேர் விண்ணப்பித்த நிலையில், 3 லட்சத்து 31, 923 பேர் மட்டுமே பங்கேற்றனர்; 41,515 பேர் பங்கேற்கவில்லை.

மொழிப்பாடம், ஆங்கிலம், குழந்தைகளுக்கான உளவியல் கல்வி போன்ற பாடங்களில் இருந்து தலா 30 வினாக்கள், முதன்மை பாடங்களில் 60 வினாக்கள் என, மொத்தம் 150 வினாக்கள் கேட்கப்பட்டன. 'டெட்' இரண்டாம் தாள் தேர்வு சற்று எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர்.

'டெட்' முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் எளிமையாக இருந்ததால், அதிகளவில் தேர்ச்சி பெற வாய்ப்பு உருவாகி உள்ளது. இதில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள, பணிபுரியும் ஆசிரியர்களும் அதிகளவு தேர்ச்சி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us