உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மே 23, 2026 04:58 AM
அ நிறம் | அளவு
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில், குற்ற வழக்குகளில், அரசு தரப்பில் ஆஜராக, ஐந்து வழக்கறிஞர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், அரசுக்கு அனுப்பிய பரிந்துரை கடிதம் அடிப்படையில், வழக்கறிஞர்கள் ஆர்.கணேஷ்குமார், ஏ.அமர்நாத், எஸ்.யோகராஜாசேகர், சி.ஆர்.மலர்வண்ணன், ஆர்.ராஜசேகரன் ஆகியோர், தற்காலிக அரசு குற்றவியல் வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கான உத்தரவை, உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் மணிவாசன் பிறப்பித்துள்ளார்.
