sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் 50 புதிய சுகாதார நிலையங்கள்

/

திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் 50 புதிய சுகாதார நிலையங்கள்

திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் 50 புதிய சுகாதார நிலையங்கள்

திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் 50 புதிய சுகாதார நிலையங்கள்

1


ADDED : மே 07, 2025 12:27 AM

Google News

ADDED : மே 07, 2025 12:27 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம் முழுதும், 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 25 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டு, சில மாதங்களாகியும் திறக்கப்படாமல் முதல்வரின் தேதிக்காக கிடப்பில் போடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், வட்டார மருத்துவமனை, வட்டம் சாராத மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை என மொத்தம், 11,333 மருத்துவமனைகள் உள்ளன.

இந்நிலையில், மாநில அரசின் வேண்டுகோளின்படி, புதிதாக, 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அமைக்கவும், மருத்துவ பணியாளர்களை நியமிக்கவும், மத்திய அரசு 2022ல் அனுமதி வழங்கியது. இதற்காக, 40 சதவீத நிதியையும் ஒதுக்கீடு செய்தது.

அதனுடன், தமிழக அரசின் 60 சதவீத நிதியையும் சேர்த்து, 2023- -- 2024ம் நிதியாண்டில் தலா, 1.20 கோடி ரூபாய் மதிப்பில், 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகர்ப்புற சுகாதார நிலையங்கள், 50 ஊர்களில் கட்டப்பட்டன.

இதன் கட்டுமானப் பணிகள் முழுதும் முடிவடைந்து, அவை சம்பந்தப்பட்ட துறையிடம், 2024ம் ஆண்டின் இறுதியில் ஒப்படைக்கப்பட்டன. ஆனாலும், இந்த கட்டடங்களுக்கு திறப்பு விழா இதுவரை நடக்கவில்லை.

அனைத்தையும், ஒரே நாளில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக திறப்பதற்காக, முதல்வரிடம் தேதி கேட்கப்பட்டு உள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

எப்படியாயினும், அவற்றை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதே, பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

-நமது நிருபர் -






      Dinamalar
      Follow us