நெல்லை, துாத்துக்குடி, நாகர்கோவில் தீபாவளிக்கு 6 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
நெல்லை, துாத்துக்குடி, நாகர்கோவில் தீபாவளிக்கு 6 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
ADDED : செப் 16, 2025 11:55 PM
சென்னை:'தீபாவளி பண்டிகையொட்டி, சென்னை - திருநெல்வேலி உட்பட, ஆறு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்' என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:
*நாகர்கோவிலில் இருந்து, வரும் 28, அக்., 5, 12, 19, 26ம் தேதிகளில் இரவு 11:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் பகல் 12:30 மணிக்கு தாம்பரம் வரும்.
தாம்பரத்தில் இருந்து, வரும் 29, அக்., 6, 13, 20, 27ம் தேதிகளில் மாலை 3:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5:15 மணிக்கு நாகர்கோவில் செல்லும்
* சென்னை சென்ட்ரலில் இருந்து, வரும் 25, அக்., 2, 9, 16, 23ம் தேதிகளில் இரவு 11:50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8:30 மணிக்கு, கோவை, போத்தனுார் செல்லும்.
போத்தனுாரில் இருந்து, வரும் 26, அக்., 3, 10, 17, 24ம் தேதிகளில் மாலை 6:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3:15 மணிக்கு சென்ட்ரல் வரும்
* சென்ட்ரலில் இருந்து வரும் 24, அக்., 1, 8, 15, 22ம் தேதிகளில் மாலை 3:10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 6:30 மணிக்கு செங்கோட்டை செல்லும்.
செங்கோட்டையில் இருந்து, வரும் 25, அக்., 2, 9, 16, 23ம் தேதிகளில் இரவு 9:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11:30 மணிக்கு சென்ட்ரல் வரும்
*திருநெல்வேலியில் இருந்து, வரும் 25, அக்., 2, 9, 16, 23ம் தேதிகளில் இரவு 9:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:00 மணிக்கு எழும்பூர் வரும்.
எழும்பூரில் இருந்து, வரும் 26, அக்., 3, 10, 17, 24ம் தேதிகளில் பகல் 12:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 1:30 மணிக்கு திருநெல்வேலி செல்லும்
* துாத்துக்குடியில் இருந்து, வரும் 29, அக்., 6, 13, 20, 27ம் தேதிகளில் இரவு 11:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:45 மணிக்கு எழும்பூர் வரும்.
எழும்பூரில் இருந்து, வரும் 30, அக்., 7, 14, 21, 28ம் தேதிகளில் பகல் 12:30 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் இரவு 11:15 மணிக்கு துாத்துக்குடி செல்லும்
* நாகர்கோவிலில் இருந்து, வரும் 30, அக்., 7, 14, 21, 28ம் தேதிகளில் காலை 9:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் இரவு 11:30 மணிக்கு சென்ட்ரல் வரும்.
சென்ட்ரலில் இருந்து, வரும் அக்., 1, 8, 15, 22, 29ம் தேதிகளில் அதிகாலை 4:15 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் இரவு 8:30 மணிக்கு நாகர்கோவில் செல்லும். இந்த சிறப்பு ரயில்களில், இன்று காலை 8:00 மணிக்கு முன்பதிவு துவங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.