sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நெல்லை, துாத்துக்குடி, நாகர்கோவில் தீபாவளிக்கு 6 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

/

நெல்லை, துாத்துக்குடி, நாகர்கோவில் தீபாவளிக்கு 6 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

நெல்லை, துாத்துக்குடி, நாகர்கோவில் தீபாவளிக்கு 6 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

நெல்லை, துாத்துக்குடி, நாகர்கோவில் தீபாவளிக்கு 6 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு


ADDED : செப் 16, 2025 11:55 PM

Google News

ADDED : செப் 16, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'தீபாவளி பண்டிகையொட்டி, சென்னை - திருநெல்வேலி உட்பட, ஆறு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்' என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:

*நாகர்கோவிலில் இருந்து, வரும் 28, அக்., 5, 12, 19, 26ம் தேதிகளில் இரவு 11:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் பகல் 12:30 மணிக்கு தாம்பரம் வரும்.

தாம்பரத்தில் இருந்து, வரும் 29, அக்., 6, 13, 20, 27ம் தேதிகளில் மாலை 3:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5:15 மணிக்கு நாகர்கோவில் செல்லும்

* சென்னை சென்ட்ரலில் இருந்து, வரும் 25, அக்., 2, 9, 16, 23ம் தேதிகளில் இரவு 11:50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8:30 மணிக்கு, கோவை, போத்தனுார் செல்லும்.

போத்தனுாரில் இருந்து, வரும் 26, அக்., 3, 10, 17, 24ம் தேதிகளில் மாலை 6:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3:15 மணிக்கு சென்ட்ரல் வரும்

* சென்ட்ரலில் இருந்து வரும் 24, அக்., 1, 8, 15, 22ம் தேதிகளில் மாலை 3:10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 6:30 மணிக்கு செங்கோட்டை செல்லும்.

செங்கோட்டையில் இருந்து, வரும் 25, அக்., 2, 9, 16, 23ம் தேதிகளில் இரவு 9:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11:30 மணிக்கு சென்ட்ரல் வரும்

*திருநெல்வேலியில் இருந்து, வரும் 25, அக்., 2, 9, 16, 23ம் தேதிகளில் இரவு 9:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:00 மணிக்கு எழும்பூர் வரும்.

எழும்பூரில் இருந்து, வரும் 26, அக்., 3, 10, 17, 24ம் தேதிகளில் பகல் 12:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 1:30 மணிக்கு திருநெல்வேலி செல்லும்

* துாத்துக்குடியில் இருந்து, வரும் 29, அக்., 6, 13, 20, 27ம் தேதிகளில் இரவு 11:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:45 மணிக்கு எழும்பூர் வரும்.

எழும்பூரில் இருந்து, வரும் 30, அக்., 7, 14, 21, 28ம் தேதிகளில் பகல் 12:30 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் இரவு 11:15 மணிக்கு துாத்துக்குடி செல்லும்

* நாகர்கோவிலில் இருந்து, வரும் 30, அக்., 7, 14, 21, 28ம் தேதிகளில் காலை 9:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் இரவு 11:30 மணிக்கு சென்ட்ரல் வரும்.

சென்ட்ரலில் இருந்து, வரும் அக்., 1, 8, 15, 22, 29ம் தேதிகளில் அதிகாலை 4:15 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் இரவு 8:30 மணிக்கு நாகர்கோவில் செல்லும். இந்த சிறப்பு ரயில்களில், இன்று காலை 8:00 மணிக்கு முன்பதிவு துவங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us