ADDED : அக் 08, 2025 06:51 AM

தமிழகத்தில் கரூரில் மிக துயரமான சம்பவத்திற்கு மாவட்ட எஸ்.பி., தான் பொறுப்பேற்க வேண்டும். அவர் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. தி.மு.க., அரசு இப்பிரச்னையில் நாடகமாடுகிறது.
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததே தி.மு.க., தான். அது தெரியாமல் முதல்வர் பேசுகிறார். தி.மு.க.,விற்கு அரசியல் நேர்மை கிடையாது. நான்கரை ஆண்டுகளில் 6,500 படுகொலைகள் தமிழகத்தில் நடந்துள்ளன.
பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகளும் நடந்துள்ளன. தி.மு.க., அமைச்சர்கள் 15 பேர் ஊழல் வழக்கை எதிர்கொண்டு வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் மக்களை திசை திருப்பும் வேளையில் ஈடுபட்டு வருகிறார். அதனால், மீதமுள்ள 6 மாதத்திலாவது ஒழுக்கமாக அரசை நடத்த வேண்டும். தி.மு.க., அணைய போகும் விளக்கு. 2026 மே மாதம் தி.மு.க.,விற்கு இறுதி காலமாக இருக்கும்.
- எச்.ராஜா, மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,