sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இரிடியம் முதலீடு மோசடி மேலும் 8 பேர் கைது

/

இரிடியம் முதலீடு மோசடி மேலும் 8 பேர் கைது

இரிடியம் முதலீடு மோசடி மேலும் 8 பேர் கைது

இரிடியம் முதலீடு மோசடி மேலும் 8 பேர் கைது


ADDED : நவ 12, 2025 01:51 AM

Google News

ADDED : நவ 12, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, :'இரிடியத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 1 கோடி ரூபாய் கிடைக்கும்' என, கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில், மேலும், எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

இரிடியம் என்ற உலோகம் மிகவும் அரிதானது. அதில், ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 1 கோடி ரூபாய் தரப்படும் என, ரிசர்வ் வங்கி பெயரை தவறாக பயன்படுத்தி, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளது.

இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிவு செய்து, முதல் கட்டமாக, 30 பேரை கைது செய்தனர்.

இதை தொடர்ந்து, தேனி மாவட்டம் கம்பம் சந்திரன், 50; வருசநாடு பழனியம்மாள், 55 உட்பட, 32 பேரை கைது செய்தனர்.

மொத்தம், 62 பேர் கைதான நிலையில், சென்னையைச் சேர்ந்த புஷ்பராஜ், 39; கோபிநாத், 38, உட்பட மேலும் எட்டு பேரை, நேற்று கைது செய்துள்ளனர்.

இவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி, மோசடிக்கு பயன்படுத்திய லேப்டாப், மொபைல் போன்கள், செல்லாத ரூபாய் நோட்டுகள், ரிசர்வ் வங்கி பெயரில் தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us