sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வழிகாட்டுதல் உருவாக்க வழக்கு; சென்னைக்கு மாற்றியது தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு

/

அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வழிகாட்டுதல் உருவாக்க வழக்கு; சென்னைக்கு மாற்றியது தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு

அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வழிகாட்டுதல் உருவாக்க வழக்கு; சென்னைக்கு மாற்றியது தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு

அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வழிகாட்டுதல் உருவாக்க வழக்கு; சென்னைக்கு மாற்றியது தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு


ADDED : அக் 15, 2025 07:14 AM

Google News

ADDED : அக் 15, 2025 07:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வழிகாட்டுதல்களை உருவாக்க தாக்கலான வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் திருக்குமரன், புதுக்கோட்டை பொன் காந்திமதிநாதன் தாக்கல் செய்த பொதுநல மனு:

கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்.27 இரவு த.வெ.க., பிரசார கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் பேசியபோது நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிக கூட்டம் கூடியது, போதிய தண்ணீர், மருத்துவ வசதி இல்லாதது, நீரிழப்பு, குழப்பத்தின் விளைவாக இச்சம்பவம் நடந்துள்ளது.

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் குறுகிய தெருக்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலிருந்து 5 கி.மீ.,துாரத்திற்குள் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், ஊர்வலம், மாநாடு, ரோடு ஷோ நடத்துவதை தடை செய்ய வேண்டும்.

ஒழுங்குபடுத்த, பாதிப்புகளை தடுக்க நிலையான வழிகாட்டுதல்களை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.

வழிகாட்டுதல்களை உருவாக்க உத்தரவிடக்கோரி தஞ்சாவூர் பிரகாஷ் மற்றொரு மனு செய்தார்.

தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஆர்.பூர்ணிமா அமர்வு விசாரித்தது.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பினேகாஸ், மனுதாரர் பிரகாஷ் ஆஜராகினர். அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா.கதிரவன், ''இதுபோல் தாக்கலான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது,'' என்றார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ.,விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வழிகாட்டுதல்களை வகுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கின் விசாரணையை இரு நீதிபதிகள் அமர்விற்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் சேர்த்து விசாரிக்க இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது என்றனர்.






      Dinamalar
      Follow us