தடுப்பு கம்பியில் சிக்கிய பைக்; தீயில் கருகி ஐ.டி., ஊழியர் பலி
தடுப்பு கம்பியில் சிக்கிய பைக்; தீயில் கருகி ஐ.டி., ஊழியர் பலி
ADDED : ஜன 01, 2024 06:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழ்பென்னாத்துார் : பெங்களூரு தனியார் நிறுவன ஐ.டி., ஊழியர் முகமது ஷாப், 23, மூன்று நண்பர்களுடன் தனித்தனி பைக்கில் புதுச்சேரி சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு பெங்களூரு திரும்பிக் கொண்டிருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் பைபாஸ் சாலை அருகே சென்றபோது, இரும்பு தடுப்பு கம்பி மீது முகமது ஷாப் ஓட்டிச்சென்ற, 'அப்பாச்சி' பைக் மோதியது.
இதனால் பைக்கில் அந்த தடுப்பு கம்பி சிக்கி, 10 மீட்டர் துாரம் இழுத்து சென்றது. அப்போது பைக்கில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.
தீயில் சிக்கிய முகமது ஷாப், உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். கீழ்பென்னாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.