ADDED : மார் 24, 2024 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை சேர்ந்தவர், 31 வயது கூலித்தொழிலாளி. இவருக்கு ஆண் குழந்தை உள்ளது. இவரது மனைவியின், 17 வயது தங்கையிடம், தொழிலாளி நெருங்கி பழகியதில், சிறுமி கர்ப்பமானார்.
கடந்த வாரம் சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, 21ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.
சிறுமிக்கு குழந்தை பிறந்ததால், மருத்துவமனை சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வந்தவாசி மகளிர் போலீசார், கூலித்தொழிலாளியை போக்சோவில் நேற்று கைது செய்தனர்.

