நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி மடத்தை சேர்ந்த ஏழு மீனவர்கள், கடந்த ஆண்டு ஜூன் 24ல், மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் ஆறு பேரை, இலங்கை நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் விடுவித்தது. அந்தோணி என்பவர் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டார். அவர் இரவு சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.