ADDED : ஜூன் 28, 2025 07:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
பயணியர் தேவை அதிகமாக உள்ள விரைவு ரயில்களில், கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. அந்த வகையில், மதுரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் விரைவு ரயில்களில், கூடுதலாக நான்கு பெட்டிகள் இணைக்கப்படும்
மதுரை - தாம்பரம் விரைவு ரயில்களில், ஜூலை 3 முதல் டிச., 27 வரை, மூன்றாம் வகுப்பு 'ஏசி' பெட்டி -3, ஸ்லீப்பர் பெட்டி -1 என, நான்கு பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்
தாம்பரம் - மதுரை விரைவு ரயில்களில், ஜூலை 4 முதல் டிச., 28ம் தேதி வரை, மூன்றாம் வகுப்பு 'ஏசி' பெட்டி -3, ஸ்லீப்பர் பெட்டி - 1 என, நான்கு பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.