sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்திற்கு கூடுதல் நிதி

/

'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்திற்கு கூடுதல் நிதி

'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்திற்கு கூடுதல் நிதி

'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்திற்கு கூடுதல் நிதி

1


ADDED : மார் 17, 2024 06:44 AM

Google News

ADDED : மார் 17, 2024 06:44 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் முகாம் நடத்த, தாலுகா ஒன்றுக்கு வழங்கப்பட்ட, 20,000 ரூபாயை, 50,000 ரூபாயாக உயர்த்தி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில், 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வாரமும் மூன்றாவது புதன்கிழமை, ஏதேனும் ஒரு கிராமத்தில் முகாம் நடத்தப்படுகிறது. இதற்கு தாலுகா ஒன்றுக்கு, 20,000 ரூபாய் வழங்க, தமிழக அரசு 88.80 லட்சம் ரூபாய் ஒதுக்கியது.

கடந்த பிப்., 2, 6ம் தேதிகளில், தலைமை செயலர் நடத்திய ஆய்வு கூட்டத்தில், மாவட்ட கலெக்டர்கள், '20,000 ரூபாய் போதுமானதாக இல்லை; அதை 50,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர்.

அதை ஏற்ற அரசு, உயர்த்தி வழங்கி உள்ளது. இதற்காக கூடுதலாக 99.90 லட்சம் ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.

இதற்கான அரசாணையை, வருவாய் துறை செயலர் ராஜாராமன் வெளியிட்டு உள்ளார்.






      Dinamalar
      Follow us