sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முருகன் மாநாட்டுக்கு 'இ--பாஸ்' ஐகோர்ட்டை அணுக அறிவுரை

/

முருகன் மாநாட்டுக்கு 'இ--பாஸ்' ஐகோர்ட்டை அணுக அறிவுரை

முருகன் மாநாட்டுக்கு 'இ--பாஸ்' ஐகோர்ட்டை அணுக அறிவுரை

முருகன் மாநாட்டுக்கு 'இ--பாஸ்' ஐகோர்ட்டை அணுக அறிவுரை


ADDED : ஜூன் 20, 2025 06:43 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில், முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் உள்ள கோவில்களின் மாதிரியை அமைக்க போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, இந்து முன்னணி தொடர்ந்த மனுவை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இதற்கிடையில், மாநாட்டில் பங்கேற்கும் வாகனங்களை குளறுபடி இல்லாமல் அனுமதிக்க வேண்டும் எனவும், இந்த விவகாரத்தில் 'இ--பாஸ்' நடைமுறையை செயல்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் இந்து முன்னணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தையே நாடுமாறு இந்து முன்னணி தரப்புக்கு அறிவுறுத்தல் வழங்கி, வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.

- -நமது சிறப்பு நிருபர் -






      Dinamalar
      Follow us