sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அ.தி.மு.க., பொதுக்கூட்டம்: பழனிசாமி அறிவிப்பு

/

அ.தி.மு.க., பொதுக்கூட்டம்: பழனிசாமி அறிவிப்பு

அ.தி.மு.க., பொதுக்கூட்டம்: பழனிசாமி அறிவிப்பு

அ.தி.மு.க., பொதுக்கூட்டம்: பழனிசாமி அறிவிப்பு

1


ADDED : ஜன 16, 2025 05:51 AM

Google News

ADDED : ஜன 16, 2025 05:51 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் நடத்தப்படும்' என, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:


அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆரின் 108வது பிறந்த நாளையொட்டி, நாளை மறுதினம் முதல் 22ம் தேதி வரை, பிப்., 12 முதல் 14ம் தேதி வரை, அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடக்கும். கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டம் நடக்கும்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல், பிப்., 5ல் நடக்க உள்ளதால், அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம், பிப்., 12, 13, 14ம் தேதிகளில் நடக்கும். கூட்டத்தில், கட்சியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கூட்டம் நடக்கும் இடம், அதில் பங்கேற்க உள்ள சிறப்பு பேச்சாளர்கள் விபரத்தை, கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை மறுதினம், செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பங்கேற்று பேச உள்ளார்.






      Dinamalar
      Follow us