சபாநாயகருக்கு எதிரான அ.தி.மு.க.,வின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி; பா.ஜ., - பா.ம.க., புறக்கணிப்பு; பன்னீர் அணி ஆதரவு
சபாநாயகருக்கு எதிரான அ.தி.மு.க.,வின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி; பா.ஜ., - பா.ம.க., புறக்கணிப்பு; பன்னீர் அணி ஆதரவு
ADDED : மார் 18, 2025 05:10 AM

சென்னை : சபாநாயகருக்கு எதிராக அ.தி.மு.க., கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
சபாநாயகர் அப்பாவு ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி, அவரை பதவியில் இருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் உதயகுமார், கே.பி.முனுசாமி, செல்லுார் ராஜு, தங்கமணி உள்ளிட்ட, 16 பேர் நேற்று சட்டசபையில் முன்மொழிந்தனர்.
தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதாகக் கூறி, தன் இருக்கையில் இருந்து எழுந்து அப்பாவு சென்று விட்டார்.
இதையடுத்து, துணை சபாநாயகர் பிச்சாண்டி சபையை நடத்தினார். ''சபாநாயகர் அப்பாவுவிற்கு எதிரான தீர்மானத்தை, எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் முன்மொழிவார்,'' என, பிச்சாண்டி கூறினர். உடனே உதயகுமார், ''தீர்மானத்தை முன்மொழிந்து, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசுவார்,'' என்று கூறி அமர்ந்தார்.
இதைத் தொடர்ந்து, பழனிசாமி பேசினார். பின், காங்., - செல்வப்பெருந்தகை, வி.சி., - சிந்தனைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூ., - நாகை மாலி, இந்திய கம்யூ., - ராமச்சந்திரன், ம.தி.மு.க., - சதன் திருமலைகுமார், ம.ம.க., - ஜவாஹிருல்லா, கொ.ம.தே.க., - ஈஸ்வரன், த.வா.க., - வேல்முருகன், புரட்சி
தொடர்ச்சி 6ம் பக்கம்