ADDED : ஜூலை 03, 2025 01:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீசார் விசாரணையின் போது கோவில் காவலாளி அஜித்குமார் இறந்தார். அவரது சகோதரரான நவீன்குமாருக்கு, காரைக்குடி ஆவின் நிறுவனத்தில் டெக்னீஷியன் பணிக்கான உத்தரவை கூட்டுறவு துறை அமைச்சரும், தி.மு.க.,வைச் சேர்ந்தவருமான பெரியகருப்பன் வழங்கினார்.
மேலும், மடப்புரம் அருகே உள்ள தெலி கிராமத்தில் 3 சென்ட் நிலத்திற்கான பட்டாவும் அஜித்குமாரின் தாய் மாலதியிடம் வழங்கப்பட்டது. கலெக்டர் பொற்கொடி, ஆர்.டி.ஓ., விஜயகுமார், தாசில்தார் விஜயகுமார் உடனிருந்தனர்.

