sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆக.22ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா

/

ஆக.22ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா

ஆக.22ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா

ஆக.22ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா


ADDED : ஆக 17, 2025 02:20 AM

Google News

ADDED : ஆக 17, 2025 02:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆக., 22ம் தேதி தமிழகம் வருகிறார். திருநெல்வேலியில் நடைபெறும் பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாட்டில் பங்கேற்கிறார்.

சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்வதற்கான பணிகளை, தமிழக பா.ஜ., துவக்கி உள்ளது. அதன்படி, சட்டசபை தொகுதி வாரியாக பூத் கமிட்டிகளை வலுப்படுத்தி, அதன் நிர்வாகிகளுக்கான மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுதும் எட்டு இடங்களில், 'பூத் கமிட்டி' நிர்வாகிகள் மாநாட்டை நடத்த, தமிழக பா.ஜ., முடிவு செய்துள்ளது.

முதல் மாநாடு, திருநெல்வேலியில் இன்று நடக்க இருந்தது. இதில், தென் மாவட்டங்களில் உள்ள ஐந்து லோக்சபா தொகுதிகளுக்கு உட்பட்ட, 28 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய, 8595 பூத் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்க இருந்தனர்.

பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், நாகாலாந்து கவர்னருமான இல.கணேசன் நேற்று முன்தினம் காலமானார். திருநெல்வேலியில் இன்று நடக்க இருந்த, 'பூத் கமிட்டி' நிர்வாகிகள் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டது.

மாநாடு ஆக., 22ம் தேதி, திருநெல்வேலியில் நடைபெறுகிறது. அன்று தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திருநெல்வேலி பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாட்டில் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.






      Dinamalar
      Follow us