sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பஸ்சில் சென்றபோது ஆந்திரா வியாபாரியிடம் ரூ.16 லட்சம் அபேஸ்: 3 பேர் கைது

/

பஸ்சில் சென்றபோது ஆந்திரா வியாபாரியிடம் ரூ.16 லட்சம் அபேஸ்: 3 பேர் கைது

பஸ்சில் சென்றபோது ஆந்திரா வியாபாரியிடம் ரூ.16 லட்சம் அபேஸ்: 3 பேர் கைது

பஸ்சில் சென்றபோது ஆந்திரா வியாபாரியிடம் ரூ.16 லட்சம் அபேஸ்: 3 பேர் கைது


ADDED : ஜன 27, 2025 09:55 PM

Google News

ADDED : ஜன 27, 2025 09:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்; திண்டுக்கல் வந்த ஆந்திரா காய்கறி வியாபாரியிடம் ரூ.16 லட்சத்தை திருடிய மூவரை திண்டுக்கல் போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

ஆந்திரா குண்டூரை சேர்ந்தவர் வீராஜ மெய்லு(64). இவர் ஆந்திராவில் காய்கறி கமிஷன் வியாபாரம் செய்கிறார். இவரிடம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் காய்கறியை வாங்கி விற்பனை செய்கின்றனர்.

இந்நிலையில் பழநியிலும் இவரிடம் சிலர் காய்கறிகளை வாங்கி விற்பனை செய்தனர். அதற்குரிய பணத்தை வீராஜ மெய்லு, வாங்க ஜன.23ல் பழநி வந்தார். ரூ.16 லட்சத்தை தன்னிடம் காய்கறி வாங்கியவர்களிடம் பெற்றுக் கொண்ட வீராஜ மெய்லு, பழநியிலிருந்து திருச்சி செல்வதற்காக பஸ் ஏறினார்.

பணத்தை பேக்கில் வைத்து பஸ்சில் தங்கள் உடமைகளை வைக்கும் இடத்தில் வைத்தார். பஸ் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் வந்தபோது பணத்தை பேக்கோடு மர்ம நபர்கள் திருடினர். வீராஜ மெய்லு, திண்டுக்கல் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி, எஸ். ஐ.,அருண் பிரசாத், க்ரைம் டீம் எஸ்.ஐ., வீரபாண்டி தலைமையிலான போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட சாணார்பட்டி பாண்டித்துரை (47), மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த செல்வம்(54) அவரது மனைவி பிரியா (34) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.10.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us