sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஏர்போர்ட் மூர்த்தி கைதுக்கு அண்ணாமலை கண்டனம்

/

ஏர்போர்ட் மூர்த்தி கைதுக்கு அண்ணாமலை கண்டனம்

ஏர்போர்ட் மூர்த்தி கைதுக்கு அண்ணாமலை கண்டனம்

ஏர்போர்ட் மூர்த்தி கைதுக்கு அண்ணாமலை கண்டனம்

4


ADDED : செப் 08, 2025 12:51 PM

Google News

ADDED : செப் 08, 2025 12:51 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தை விட, கேடுகெட்ட ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்திக் கொண்டிருப்பதாக பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு வெளியே புரட்சி தமிழகம் கட்சியின் தலவைர் ஏர்போர்ட் மூர்த்தி மீது விசிகவினர் தாக்குதலை நடத்தினர். பதிலுக்கு அவரும் தாக்கியுள்ளார். இதையடுத்து, ஏர்போர்ட் மூர்த்தி மீது சென்னை போலீஸில் விசிகவினர் புகார் அளித்தனர். அதன்பேரில், ஏர்போர்ட் மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

ஏர்போர்ட் மூர்த்தி கைது சம்பவத்திற்கு பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை; புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது, டிஜிபி அலுவலக வாயிலில் வைத்து, விசிக கட்சி ரவுடிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்ட விசிக ரவுடிகளை விட்டுவிட்டு, தன்னை தற்காத்துக்கொள்ள முயற்சித்த ஏர்போர்ட் மூர்த்தியைக் கைது செய்திருக்கிறது திமுக அரசின் காவல்துறை.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 2006 - 2011 ஆட்சிக்காலத்தை விட, கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார், அவரது மகன் முதல்வர் ஸ்டாலின், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us