sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு

/

வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு

வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு

வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு

1


ADDED : செப் 19, 2024 12:25 AM

Google News

ADDED : செப் 19, 2024 12:25 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை மாநகராட்சி சார்பில், மழைநீர் கால்வாய் மற்றும் நடைபாதை அமைப்பதில், 26.61 கோடி ரூபாய் ஊழல் செய்து விட்டதாக, முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

அ.தி.மு.க., ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த வேலுமணி, தற்போது தொண்டாமுத்துார் தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.

அவர், அமைச்சராக இருந்தபோது, சென்னை மாநகராட்சி சார்பில், மழைநீர் கால்வாய் அமைக்க, 290 கோடி ரூபாயிலும்; சாலைகள் சீரமைப்பு மற்றும் நடைபாதைகள் அமைக்க, 246.39 கோடி ரூபாயிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கியதில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்து இருப்பதாக, அறப்போர் இயக்கம் சார்பில், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர்.

அப்போது, மழை நீர் கால்வாய் மற்றும் சாலை சீரமைப்பு, நடைபாதைகள் அமைப்பதில், 26.61 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்து இருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக, வேலுமணி, சென்னை மாநகராட்சி செயற் பொறியாளர்கள் முருகன், சரவணமூர்த்தி, பெரியசாமி, சின்னதுரை, நாச்சன், ஓய்வு பெற்ற கண்காணிப்பு பொறியாளர் சின்னசாமி, மண்டல அதிகாரி சுகுமார், கண்காணிப்பு பொறியாளர் விஜயகுமார், தலைமை பொறியாளர் நந்தகுமார் உட்பட, 11 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us