sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பால கவுதமனுக்கு முன் ஜாமின்

/

பால கவுதமனுக்கு முன் ஜாமின்

பால கவுதமனுக்கு முன் ஜாமின்

பால கவுதமனுக்கு முன் ஜாமின்


ADDED : செப் 22, 2025 03:36 AM

Google News

ADDED : செப் 22, 2025 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநருமான பால கவுதமனுக்கு, முன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்தவர் பால கவுதமன்; வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர். இவர், தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த உஸ்தாத் பீர் முகமது சதிக்கி, பயங்கரவாதத்தை துாண்டும் விதமாக பேசியது குறித்து, 'ஸ்ரீடிவி' வாயிலாக விளக்கம் அளித்தார். இதற்காக, பால கவுதமன் மீது, சென்னை மாநகர போலீசின் சைபர் குற்றப்பிரிவு, சமூக வலைதள கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அவருக்கு, 'சம்மன்' அனுப்பி விசாரித்து வாக்குமூலமும் பெற்றனர். அப்போது அவர் போலீசாரிடம், 'என் பேச்சில் எவ்வித உள் நோக்கமும் இல்லை. இந்திய இறையாண்மைக்கு எதிராக தேச விரோத செயலில் ஈடுபட முயற்சி செய்வோரின், முகத்திரையை கிழித்து வருகிறேன். உஸ்தாத் பீர் முகமது சதிக்கின் பேச்சில் இருக்கும் விஷமத்தனம் குறித்தும் விளக்கம் அளித்தேன்' என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இம்மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் விசாரித்து, பால கவுதமனுக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us