sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.38,699 கோடி முதலீட்டில் 14 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல்

/

ரூ.38,699 கோடி முதலீட்டில் 14 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல்

ரூ.38,699 கோடி முதலீட்டில் 14 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல்

ரூ.38,699 கோடி முதலீட்டில் 14 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல்


ADDED : அக் 09, 2024 02:22 AM

Google News

ADDED : அக் 09, 2024 02:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''தமிழக அமைச்சரவை கூட்டத்தில், 38,698.80 கோடி ரூபாய் முதலீடுக்கான, 14 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் வழியாக, 46,931 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்,'' என, அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்த மாற்றத்திற்கு பின், நேற்று தலைமை செயலகத்தில், அமைச்சரவை கூட்டம் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். காலை 11:00 மணிக்கு துவங்கிய கூட்டம், பகல் 12:00 மணிக்கு நிறைவடைந்தது.

தமிழகத்திற்கு புதிதாக வர உள்ள தொழில் முதலீடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. புதிய தொழில்கள் துவங்க, பல்வேறு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், தங்களுக்கான மாவட்டத்தில், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, மழையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்க, முதல்வர் அறிவுறுத்தினார்.

கூட்டம் முடிந்த பின், அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டி:

அமைச்சரவை கூட்டத்தில், 38,698.80 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான, 14 புதிய முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக, 46,931 பேருக்கு புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாகும். பல்வேறு மாவட்டங்களில் பரவலாக முதலீடுகள் அமைய உள்ளன.

சமீப காலத்தில் உருவாக்கப்பட்ட, முதலீடு திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

அமைப்பு ரீதியான சலுகைகளுக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. நம் இலக்கை அடைவதுடன், வேலை வாய்ப்பை உருவாக்குவது முக்கியம். படித்த திறன் படைத்தவர்கள் அதிகம் பேர் தமிழகத்தில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிறுவனத்தின் பெயர் - மாவட்டம் - முதலீடு, ரூபாய் கோடியில் - வேலை வாய்ப்பு


ப்ரீ டிரெண்ட் இண்டஸ்ட்ரியல் இந்தியா - அரியலுார் - 1,000 - 15,000 கிராண்ட் அட்லாண்டிகா - ராணிப்பேட்டை - 500 - 5,000 கேன்ஸ் சர்க்யூட்ஸ் இந்தியா - காஞ்சிபுரம் - 1,395 - 1,033 அசென்ட் சர்க்யூட்ஸ் - கிருஷ்ணகிரி - 612.6 - 1,200 லீப் கிரீன் எனர்ஜி - துாத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம் - 10,375 - 3,000 டேப்லட்ஸ் இந்தியா - செங்கல்பட்டு - 250 - 350 விஸ்டன் குரூப் - காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை - 368.92 - 658லுாகாஸ் டி.வி.எஸ்., குரூப் - சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி - 510 - 415மகிந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் - செங்கல்பட்டு, திருவண்ணாமலை - 210 - 400நோக்கியா சொல்யூசன்ஸ் அண்டு நெட்வொர்க் - காஞ்சிபுரம் - 296.63 - 100ராக்வெல் குரூப் - காஞ்சிபுரம் - 483.65 - 375சூப்பர் ஆட்டோ போர்ஜ் - செங்கல்பட்டு, காஞ்சிபுரம் - 517 - 400யூசான் டெக்னாலஜி இந்தியா - காஞ்சிபுரம் - 13,180 - 14,000டாடா மோட்டார்ஸ் - ராணிப்பேட்டை - 9,000 - 5,000மொத்தம் - 38,699 - 46,931








      Dinamalar
      Follow us