sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அருணா ஜெகதீசன் ஆணையம் மீண்டும் விசாரணை

/

அருணா ஜெகதீசன் ஆணையம் மீண்டும் விசாரணை

அருணா ஜெகதீசன் ஆணையம் மீண்டும் விசாரணை

அருணா ஜெகதீசன் ஆணையம் மீண்டும் விசாரணை


ADDED : அக் 09, 2025 02:47 AM

Google News

ADDED : அக் 09, 2025 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூரில், த.வெ.க., பிரசார கூட்டத்தில் நடந்த உயிரிழப்பு தொடர்பாக வரும், 11 முதல், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஆணையம் மீண்டும் விசாரிக்க உள்ளது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த, 27ல் நடந்த த.வெ.க., பிரசார கூட்டத்தில், நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி, 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, ஆணைய தலைவர் அருணா ஜெகதீசன், சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த, 28ல் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஆணையம் அமைத்ததற்கான அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டது.

இதனால் வரும், 11 முதல் மீண்டும் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம், கரூரில் விசாரணையை மேற்கொள்ள உள்ளது. அதற்காக, கரூரில் ஆணைய அலுவலகம் அமைப்பது உள்ளிட்ட, பல்வேறு பணிகளை வருவாய் துறை அதிகாரிகள் மும்முரமாக செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us