sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நாகை மீனவர்களை நடுக்கடலில் தாக்கி கொள்ளை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

/

நாகை மீனவர்களை நடுக்கடலில் தாக்கி கொள்ளை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

நாகை மீனவர்களை நடுக்கடலில் தாக்கி கொள்ளை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

நாகை மீனவர்களை நடுக்கடலில் தாக்கி கொள்ளை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்


ADDED : அக் 11, 2024 05:45 AM

Google News

ADDED : அக் 11, 2024 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம்: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த செருதுார் மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி, பொருட்களை, கொள்ளையடித்து சென்றனர்.

நாகை மாவட்டம் செருதூரில் இருந்து கடந்த 8ம் தேதி, நான்கு பைபர் படகுகளில் 18 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். 9ம் தேதி இரவு கோடியக்கரையில் இருந்து 20 கடல் மைல் தொலைவில், நான்கு படகுகளும் தனி, தனியாக வெவ்வேறு பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அதிவேக இன்ஜின் பொருத்தப்பட்ட பைபர் படகில் வந்த 9 இலங்கை கடற் கொள்ளையர்கள், படகில் இருந்த நாகை மீனவர்களை தாக்கி, கொடூர ஆயுதங்களை காட்டி மிரட்டி படகுகளில் இருந்த 600 கிலோ எடையுடைய வலைகள், மீன்பிடி உபகரணங்கள், மீனவர்கள் அணிந்திருந்த வெள்ளி அரைஞாண் கொடி போன்ற பொருட்களை பறித்துச் சென்றனர். 4 படகிலும் சேத மதிப்பு 6 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து கீழையூர்,கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us