sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேனீக்கள் கொட்டியதில் கேரள சுற்றுலாப் பயணி பலி

/

தேனீக்கள் கொட்டியதில் கேரள சுற்றுலாப் பயணி பலி

தேனீக்கள் கொட்டியதில் கேரள சுற்றுலாப் பயணி பலி

தேனீக்கள் கொட்டியதில் கேரள சுற்றுலாப் பயணி பலி


ADDED : ஏப் 02, 2025 05:25 PM

Google News

ADDED : ஏப் 02, 2025 05:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர்: நீலகிரியில் ஆயிரக்கணக்கான தேனீக்கள் கொட்டியதில் கேரளாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சினான், ஆசிப், 23, ஜாபீர், 24 ஆகிய மூன்று சுற்றுலா பயணிகள், இன்று, நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே, ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, ஊசிமலை காட்சி முனைக்கு சென்றனர்.

இவர்கள் தடை செய்யப்பட்ட பாறை பகுதிக்கு சென்றனர். அப்போது ஆசிப், ஜாபீர், ஆகியோரை தேனீக்கள் கொட்டியது. ஆசிப் தேனீக்களிடமிருந்து தப்பினர். சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.ஜாபீர் தேனீக்களிடம் சிக்கினர்.

தீயணைப்பு வீரர்கள், வனத்துறை ஊழியர்கள், போராடி அவரை மீட்டனர். ஆனால், ஆயிரக்கணக்கான தேனீக்கள் கொட்டியதில் ஜாபீர் உயிரிழந்தார். இது குறித்து நடுவட்டம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us