sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோவையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

/

கோவையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்


ADDED : மார் 19, 2024 06:21 AM

Google News

ADDED : மார் 19, 2024 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவையில் நேற்று மாலை நடைபெற்ற, 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

அதற்காக கோவை அவிநாசி ரோட்டில் உள்ள பள்ளிகள் மற்றும் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பள்ளிகளுக்கு, மதியத்திற்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மதியம் போலீஸ் அவசர எண், 100க்கு ஓர் அழைப்பு வந்தது.

அதில் பேசிய மர்ம நபர் கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், சிறிது நேரத்தில் வெடிக்க உள்ளதாகவும் கூறி, அழைப்பை துண்டித்து உள்ளார்.

அதிர்ச்சி அடைந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அந்த பள்ளிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

அதில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிந்தது. போலீசார் நிம்மதி அடைந்தனர். வெடிகுண்டு மிரட்டல் தகவல் கிடைத்ததும், மாணவர்களின் பெற்றோர் குழந்தைகளை அழைத்து செல்ல முயன்றனர்.

அவர்களிடம் பள்ளி நிர்வாகம், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று விளக்கம் அளித்தது. அதன் பின், அவர்கள் கலைந்தனர்.






      Dinamalar
      Follow us