sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசு திட்டங்களுக்கு அம்பேத்கர் பெயரை வைக்க முடியுமா? தி.மு.க.,வுக்கு சவால் விட்ட ராமதாஸ்

/

அரசு திட்டங்களுக்கு அம்பேத்கர் பெயரை வைக்க முடியுமா? தி.மு.க.,வுக்கு சவால் விட்ட ராமதாஸ்

அரசு திட்டங்களுக்கு அம்பேத்கர் பெயரை வைக்க முடியுமா? தி.மு.க.,வுக்கு சவால் விட்ட ராமதாஸ்

அரசு திட்டங்களுக்கு அம்பேத்கர் பெயரை வைக்க முடியுமா? தி.மு.க.,வுக்கு சவால் விட்ட ராமதாஸ்

1


ADDED : டிச 26, 2024 12:17 PM

Google News

ADDED : டிச 26, 2024 12:17 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அம்பேத்கர் மீது தி.மு.க.,வுக்கு மரியாதை இருந்தால் அரசின் திட்டங்களுக்கு அவரது பெயரைச் சூட்டுவதற்கு தி.மு.க., அரசு தயாரா? என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சவால் விட்டுள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைவழிகாட்டி. இந்தியாவிலேயே பட்டியலினத்தவர் அல்லாதவரால் தொடங்கப் பட்ட கட்சிக்கு அண்ணல் அம்பேத்கரை கொள்கை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். அவர் மீது கொண்ட மதிப்பால் எங்கள் வீட்டு வளாகத்தில் அவரது உருவச் சிலையை அமைத்திருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட சிலைகளை திறந்திருக்கிறோம். அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 7 இடங்களில் அம்பேத்கர் சிலைகளை நான் திறந்தேன். ஆனால், அண்ணல் அம்பேத்கரின் பெருமைகளை காப்பதற்காக பிறந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் தி.மு.க.,அண்ணல் அம்பேத்கருக்காக என்ன செய்தது?

1949ம் ஆண்டில் தி.மு.க., தொடங்கப்பட்டது. அதன்பின் 1989ம் ஆண்டில் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது. இடைப்பட்ட 40 ஆண்டு காலத்தில் அண்ணல் அம்பேத்கரைப் பற்றி தி.மு.க., எத்தனை முறை பேசியது. இந்தியா முழுவதும் சட்டக் கல்லூரிகளுக்கு அம்பேத்கர் பெயர் சூட்டும் வழக்கம் ஏற்பட்ட பிறகு தான் 1990ம் ஆண்டில் சென்னை சட்டக்கல்லூரிக்கும், 1997ம் ஆண்டில் தொடங்கப்பட்ட சட்டப்பல்கலைக்கழகத்திற்கும் அம்பேத்கரின் பெயரை தி.மு.க., சூட்டியது.

இன்று வரை தி.மு.க., தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அம்பேத்கருக்கு சிலை அமைக்கப்படவில்லை. 2021ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு 40க்கும் மேற்பட்ட திட்டங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது. கருணாநிதியின் பெயர் மட்டுமல்ல, தமிழகத்தின் நலனுக்கு எந்த பங்களிப்பும் செய்யாத அவரது தாயார் பெயரிலும் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், எந்த புதிய திட்டத்திற்கும், கட்டிடங்களுக்கும் அண்ணல் அம்பேத்கர் பெயர் சூட்டப்படவில்லை. இது தான் அண்ணலுக்கு செலுத்தும் மரியாதையா? என தி.மு.க., அரசு விளக்க வேண்டும்.

சென்னை கிண்டி மருத்துவமனை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளிட்ட கட்டிடங்களுக்கும், அரசின் திட்டங்களுக்கும் அண்ணல் அம்பேத்கரின் பெயரை தி.மு.க., அரசு சூட்ட வேண்டும். தி.மு.க., அரசு செய்யுமா?, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us