sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செருப்பால் அடித்த உதவி மேலாளர் மீது வழக்கு

/

செருப்பால் அடித்த உதவி மேலாளர் மீது வழக்கு

செருப்பால் அடித்த உதவி மேலாளர் மீது வழக்கு

செருப்பால் அடித்த உதவி மேலாளர் மீது வழக்கு

2


ADDED : ஜூன் 11, 2025 02:29 AM

Google News

ADDED : ஜூன் 11, 2025 02:29 AM

2


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையில் அரசு பஸ்சை முன்கூட்டியே இயக்குவது தொடர்பாக எழுந்த பிரச்னையில், டிரைவர் கணேசனை செருப்பால் அடித்ததால் 'சஸ்பெண்ட்' ஆன அரசு போக்குவரத்துக்கழக உதவி மேலாளர் மாரிமுத்து மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் அதிகாலை கோவை தாராபுரத்தில் இருந்து மதுரை ஆரப்பாளையம் வந்த அரசு பஸ்சை டிரைவர் கணேசன் ஓட்டி வந்தார். பஸ்ஸடாண்டுக்கு முன்பாகவே பயணிகள் ஏறியதால் அதுபற்றி நிலைய அதிகாரிகளிடம் டிரைவர், கண்டக்டர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே 2 பஸ்களில் கூட்டம் இருந்ததால், தாராபுரம் பஸ்சை உடனே எடுக்க அனுமதிக்க இயலாது என தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக எழுந்த பிரச்னையில் டிரைவர் கணேசனை, உதவி மேலாளர் மாரிமுத்து செருப்பால் அடித்தார். இப்பிரச்னையில் மாரிமுத்து மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சி.ஐ.டி.யு., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உதவி மேலாளரை கோட்ட போக்குவரத்துக் கழக மேலாளர் இளங்கோவன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

மாரிமுத்து மீது கரிமேடு போலீசில் பாதிக்கப்பட்ட டிரைவர் கணேசன் புகார் செய்தார். மிரட்டுதல், அடித்தல், செருப்பால் தாக்குதல் உள்பட 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us