sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தாது மணல் முறைகேடு புகார் 'வி.வி.மினரல்ஸ்' நிறுவனத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை

/

தாது மணல் முறைகேடு புகார் 'வி.வி.மினரல்ஸ்' நிறுவனத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை

தாது மணல் முறைகேடு புகார் 'வி.வி.மினரல்ஸ்' நிறுவனத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை

தாது மணல் முறைகேடு புகார் 'வி.வி.மினரல்ஸ்' நிறுவனத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை


ADDED : ஏப் 06, 2025 01:31 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ஏப். 6-

கனிமவள முறைகேடு தொடர்பான புகாரில் சென்னை, திருநெல்வேலியில் 'வி.வி.மினரல்ஸ்' நிறுவன அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வி.வி.மினரல்ஸ் உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள், தாது மணல் எடுத்து விற்பனை செய்தன. அப்போது, தாது மணலை சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு விற்பதாக, 2012ல் புகார்கள் எழுந்தன.

சட்ட விரோதமாக தாது மணல் எடுக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி, சத்யபிரதா சாஹு அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழு நடத்திய ஆய்வுக்கு பின், 5,832 கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்குகளை, சி.பி.ஐ.,க்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், சென்னை மற்றும் திருநெல்வேலியில் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திற்கு தொடர்புடைய, 15 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சென்னை, எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள வி.வி.மினரல்ஸ் அலுவலகத்தில் காலை, 9:00 மணி முதல், 10க்கும் மேற்பட்ட சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அதேபோல், எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கம் அருகே, வி.வி.மினரல்ஸ் தொடர்புடைய மற்றொரு நிறுவனத்திலும், அந்நிறுவன ஆடிட்டர் ஹரி என்பவர் வீட்டிலும், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை அருகே கீரைக்காரன்தட்டு கிராமத்தில் உள்ள வி.வி. மினரல்ஸ் உள்ளிட்ட சகோதர நிறுவனங்களிலும்சோதனைமேற்கொண்டனர்.சோதனை தொடர்வதால் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து, சி.பி.ஐ., தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

***






      Dinamalar
      Follow us