sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வங்கியில் நகை திருட்டு சி.பி.ஐ., வழக்குப்பதிவு

/

வங்கியில் நகை திருட்டு சி.பி.ஐ., வழக்குப்பதிவு

வங்கியில் நகை திருட்டு சி.பி.ஐ., வழக்குப்பதிவு

வங்கியில் நகை திருட்டு சி.பி.ஐ., வழக்குப்பதிவு


ADDED : ஜன 24, 2025 12:43 AM

Google News

ADDED : ஜன 24, 2025 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:திருப்பூர் மாவட்டம், கேத்தனுார் எஸ்.பி.ஐ., வங்கியில், அடகு வைத்த நகைகள் திருடப்பட்டது தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கேத்தனுாரில், எஸ்.பி.ஐ., வங்கியில் அடகு வைத்த நகைகள், நுாதன முறையில் திருடப்பட்டன. இது குறித்து, 2022ல் அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், அந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சேகர், நுாதன முறையில் நகைகளை திருடியது தெரிய வந்தது. இது தொடர்பாக, சேகர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, 144 சவரன் நகை, 19.80 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த நுாதன நகை திருட்டு தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us