ADDED : ஜூலை 08, 2025 10:40 PM
சென்னை:'தமிழகத்தில் ஒருசில இடங்களில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது.
அதன் அறிக்கை:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இன்று இடி, மின்னலுடன், மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை தொடரலாம்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில், இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாகலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒருசில இடங்களில், இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
12 இடங்களில் சதம்
தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, 12 நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது.
இதில், அதிகபட்சமாக மதுரை விமான நிலைய பகுதியில், 106 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 41.2 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
சென்னை, கடலுார், ஈரோடு, கரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, தஞ்சாவூர், திருச்சி, திருவள்ளூர், துாத்துக்குடி, வேலுார் ஆகிய இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெயில் வாட்டியதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.