ADDED : ஆக 21, 2025 10:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:
மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே ஞாயிறன்று இயக்கப்படும் சிறப்பு ரயில், செப்., 7 முதல் நவம்பர் 30ம் தேதி வரையிலும், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே திங்கள் கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், செப்., 8 முதல் டிச., 1ம் தேதி வரையும் நீட்டித்து இயக்கப்பட உள்ளன
திருச்சி - தாம்பரம், தாம்பரம் - திருச்சி இடையே, வாரந்தோறும் செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறுகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், செப்., 2 முதல் நவ., 30ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளன. டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.