sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 கோவை செம்மொழி பூங்கா வரும் 25ல் திறக்கிறார் முதல்வர்

/

 கோவை செம்மொழி பூங்கா வரும் 25ல் திறக்கிறார் முதல்வர்

 கோவை செம்மொழி பூங்கா வரும் 25ல் திறக்கிறார் முதல்வர்

 கோவை செம்மொழி பூங்கா வரும் 25ல் திறக்கிறார் முதல்வர்


ADDED : நவ 23, 2025 01:46 AM

Google News

ADDED : நவ 23, 2025 01:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: முதல்வர் ஸ்டாலின், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, இரண்டு நாள் பயணமாக, வரும் 25ம் தேதி கோவை செல்கிறார்.

அன்று காலை கோவையில் 45 ஏக்கரில், 208.50 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

மாலை, தொழில்துறை சார்பில் நடத்தப்படும், மண்டல முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். இம்மாநாட்டில், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்பட உள்ளன.

மறுநாள் 26ம் தேதி காலை, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில், மாவீரன் பொல்லான் சிலையுடன் கூடிய அரங்கை திறந்து வைக்கிறார். பின்னர் தீரன் சின்னமலை மணிமண்டபம் சென்று, அவரது சிலைக்கு மலர்துாவி மரியாதை செலுத்த உள்ளார்.

ஈரோடு, சோலார் புதிய பஸ் நிலைய வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில், 605 கோடி ரூபாயில் முடிவடைந்த பணிகளை துவக்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும், 1,84,491 பேருக்கு நலத்திட்ட உதவி களை வழங்க உள்ளார். மாலையில், சித்தோடு ஆவின் பால்பண்ணை வளாகத்தில், பால்வளத் தந்தை பரமசிவன் சிலையை திறந்து வைக்க உள்ளார்.






      Dinamalar
      Follow us