sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முதல்வர் மருந்தகம் நடத்த தலா ரூ.1.50 லட்சம் மானியம்

/

முதல்வர் மருந்தகம் நடத்த தலா ரூ.1.50 லட்சம் மானியம்

முதல்வர் மருந்தகம் நடத்த தலா ரூ.1.50 லட்சம் மானியம்

முதல்வர் மருந்தகம் நடத்த தலா ரூ.1.50 லட்சம் மானியம்


ADDED : ஜன 24, 2025 12:18 AM

Google News

ADDED : ஜன 24, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'முதல்வர் மருந்தகம் நடத்த தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, முதற்கட்டமாக அரசு மானியமாக, தலா, 1.50 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டு உள்ளது' என, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

மக்களுக்கு குறைந்த விலையில், ஜெனரிக், பிற வகை மருந்துகள் கிடைக்க, முதல்வர் மருந்தகங்கள், 1,000 இடங்களில் துவக்கப்பட உள்ளன. இதற்காக, தொழில் முனைவோரிடம் இருந்து 638, கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து, 490 என, மொத்தம், 1,128 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, முதற்கட்டமாக அரசு மானியமாக, தலா, 1.50 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சி வழங்கப்படுகிறது. முதற் கட்டமாக, தொழில்முனைவோர், கூட்டுறவு சங்க மருந்தாளுநருக்கு, மருந்து இருப்பு பராமரிப்பு, விற்பனை முறை உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

மருந்தகம் அமைக்கும் பணிகள் மற்றும் பயிற்சி நடவடிக்கையை மேற்பார்வையிட, அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் பதிவாளர் நிலையில் மண்டல அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், முதல்வர் மருந்தகம், சேமிப்பு கிடங்குகளை ஆய்வு செய்து, பணிகளை துரிதப்படுத்தி, விரைவில் மருந்தகம் துவக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us