ADDED : ஆக 20, 2025 02:49 AM
சென்னை:முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஆகியோர், இன்று தங்களது 50வது திருமண நாளை கொண்டாடுகின்றனர். இதையொட்டி, தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்களுக்கு, முதல்வரின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில், நேற்றிரவு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.
இதில், வி.சி., தலைவர் திருமாவளவன், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, ம.நீ.ம., தலைவர் கமல், இந்திய கம்யூ., மாநில பொதுச்செயலர் முத்தரசன், மார்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, முதல்வரின் மனைவி துர்கா, துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு ஆகியோர் உடன் இருந்தனர். துணை ஜனாதிபதி தேர்தல் குறித்தும், கூட்டணியை பலப்படுத்துவது குறித்தும், இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின்வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், 'கூட்டாட்சியலுக்கு எதிரான போக்கு, ஏதேச்சதிகாரம் மற்றும் வெறுப்புணர்வை பரப்புவது ஆகியவற்றை எதிர்த்து நிற்க கூடியவராக சுதர்சன் ரெட்டி உள்ளார். துணை ஜனாதிபதி வேட்பாளராக அவரது தேர்வு மிக சரியான தேர்வு' என, கூறியுள்ளார்.