sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

/

கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

3


ADDED : அக் 17, 2025 01:56 AM

Google News

ADDED : அக் 17, 2025 01:56 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம், கச்சத்தீவை மீட்பது குறித்து பேசுமாறு, பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:

இலங்கை பிரதமர் மூன்று நாள் பயணமாக டில்லி வந்துள்ளார். இப்பயணம், பாக் விரிகுடாவின் பாரம்பரிய மீன்பிடி கடல் பகுதியில், இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான பிரச்னைகளை தீர்க்க, சிறந்த வாய்ப்பை வழங்கி உள்ளது.

கடந்த 2001 முதல், 106 சம்பவங்களில், 1,482 மீனவர்கள், 198 மீன்பிடி படகுகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. இதனால், மீனவர்கள் பெரும் துயரத்தையும், பொருளாதார இழப்பையும் எதிர்கொண்டுள்ளனர்.

இது குறித்து, இலங்கை பிரதமரிடம் விவாதிக்க வேண்டும். கச்சத்தீவு, மாநில அரசின் முறையான ஒப்புதலை பெறாமல், இலங்கைக்கு மாற்றப்பட்டது.

அதை மீட்பதற்கும், பாக் விரிகுடா பகுதியில் உள்ள நம் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பதற்கும், இலங்கை பிரதமரிடம் பேச வேண்டும். மீனவர்கள் பிரச்னைகளை தீர்க்க, இது முக்கியமானது.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். மீனவர்கள் பிரச்னையை தீர்க்க, இருதரப்பு பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மற்றும் நிலையான துாதரக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது நான்காவது கடிதம் கச்சத்தீவை மீட்கக் கோரி, 2023 ஏப்., 19 மற்றும் 2024 ஜூலை 2ம் தேதி, பிரதமருக்கு, முதல்வர் கடிதம் எழுதினார். இந்த ஆண்டு ஏப்., 2ம் தேதி, கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மறுநாள் தீர்மானத்தை குறிப்பிட்டு, மீண்டும் பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதினார். அதன்பின் நேற்று கடிதம் எழுதி உள்ளார். இது தவிர, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும்போது, அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு, முதல்வர் பலமுறை கடிதம் எழுதியுள்ளார். அந்த வகையில், 72 கடிதங்களை முதல்வர் எழுதி உள்ளார். அவற்றிலும், கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி உள்ளார்.



கச்சத்தீவுக்கு முதல்வர் செல்ல வேண்டும் தமிழக மீனவர்களின் நலன், பாதுகாப்பு குறித்து கவலைப்படாமல், தங்களின் சுயநலத்துக்காக, மத்தியில் இருந்த காங்கிரசின் முன்னாள் பிரதமர் இந்திராவும், முன்னாள் தி.மு.க., தலைவரும், முதல்வருமான கருணாநிதியும், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தனர். இது, தி.மு.க.,வினர் உட்பட அனை வருக்கும் தெரியும். ஆனால், கச்சத்தீவை மீட்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் திரும்ப திரும்ப கூறி நாடகமாகி வருகிறார். இதே கோரிக்கையை வலியுறுத்தி, அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை அதிபர் அனுர குமார, கடந்த செப்டம்பரில் கச்சத்தீவுக்கு பயணம் செய்தார். அதேபோல், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதோடு மட்டும் அல்லாமல், தன் அமைச்சர்களுடன், ஸ்டாலினும் கச்சத்தீவு செல்ல வேண்டும். இலங்கை மக்கள், ஸ்டாலினை பார்த்து, 'உங்கள் தந்தை கருணாநிதி, எங்களுக்கு கொடுத்த கச்சத்தீவை, நீங்கள் வந்து கேட்கிறீர்களே; இது, உங்களுக்கே நியாயமா' என்று கேட்பர். அப்போது தான், இலங்கை விவகாரத்தில், தி.மு.க., தொடர்ந்து நாடகமாடி வருவது தெரியவரும். -சக்கரவர்த்தி தமிழக பா.ஜ., துணை தலைவர்








      Dinamalar
      Follow us