sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தற்செயல் விடுப்பு கிடையாது தலைமை செயலர் அறிவிப்பு

/

தற்செயல் விடுப்பு கிடையாது தலைமை செயலர் அறிவிப்பு

தற்செயல் விடுப்பு கிடையாது தலைமை செயலர் அறிவிப்பு

தற்செயல் விடுப்பு கிடையாது தலைமை செயலர் அறிவிப்பு


ADDED : செப் 11, 2025 02:01 AM

Google News

ADDED : செப் 11, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'அரசு ஊழியர்கள், தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது' என, தலைமைச் செயலர் தெரிவித்து உள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட, பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.பி.எஸ் ., ஒழிப்பு இயக்கம் சார்பில், இன்று தற்செயல் விடுப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தலைமைச் செயலர் முருகானந்தம், அனைத்து துறை செயலர்கள், மாவட்ட கலெக்டர்கள், அனைத்து துறை தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்:

சில சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று ஒரு நாள் கூட்டு தற்செயல் விடுப்பு கோரியுள்ளனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சேவை சங்க விதிகளின்படி, உறுப்பினர்கள் கூட்டு தற்செயல் விடுப்புக்கு விண்ணப்பிக்க முடியாது.

எனவே, அனைத்து மாவட்ட கலெக்டர்களும், துறை தலைவர்களும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலக பணியாளர்களின் வருகை நிலவரம் குறித்த அறிக்கையை, இன்று காலை 10:15 மணிக்குள், மனிதவள மேம்பாட்டு துறைக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us