எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு மூடுவிழா: பன்னீர்செல்வம் புகார்
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு மூடுவிழா: பன்னீர்செல்வம் புகார்
ADDED : டிச 16, 2025 07:24 AM

சென்னை: அனைத்திந்திய அ ண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்பு க்கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செ ல்வம் அறிக்கை: மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் பணியாற்றும், 2,500 ஊழியர்கள், பணி நிரந்தரம் கோரி, ஜன., 4ல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதையடுத்து, திட்ட இயக்கு நர் எழு திய கடிதத்தில், 'மத்திய அரசு நிதியுதவியில் இ யங்கும் இத்திட்டம், மார்ச் 31ல் முடிகிறது என்பதால், பணி நிரந்தரம் செ ய்ய முடியாது' என கூற ப்ப ட்டுள்ளது. திட்ட இந்த பதிலை பார்க்கும்போது, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு, தி.மு.க., அரசு மூடுவிழா ந டத்தி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் நிதியுதவியுடன் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் செயல்பட்டாலும், அதைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டிய கட மை மாநில அரசுக்கு உண்டு. ஊழியர்களின் கோரிக்கையை தி.மு.க., அரசு நிறைவேற்றாமல், பணி நிரந்தரம் செய்ய முடி யாது என பதி ல் அளிப்பது, பொறு ப்பை தட்டிக்கழிக்கும் செயல். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

