sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விபத்தால் பாதித்த பெண்ணுக்கு இழப்பீடு

/

விபத்தால் பாதித்த பெண்ணுக்கு இழப்பீடு

விபத்தால் பாதித்த பெண்ணுக்கு இழப்பீடு

விபத்தால் பாதித்த பெண்ணுக்கு இழப்பீடு


ADDED : ஏப் 04, 2025 12:48 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:விபத்தால் மாற்றுத்திறனாளியான சென்னை பெண்ணுக்கு, 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த, 2019ல் நடந்த சாலை விபத்தில், சென்னையை சேர்ந்த பிரதீஷா படுகாயமடைந்தார்; இந்த விபத்தில் அவரது தயார் உயிரிழந்த நிலையில், பிரதிஷாவுக்கு, 50 சதவீத உடல் ஊனம் ஏற்பட்டது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பிரதீஷாவுக்கு, 1.72 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்க உத்தரவிட்டது.

இந்த தொகை போதுமானதாக இல்லை எனக்கூறி, பிரதீஷா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இந்த மனு, நீதிபதி சூரியகாந்த் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், 'இந்த விபத்தால் கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்க்கைக்கான பாதுகாப்பு என்று பல்வேறு இழப்புகளை பிரதீஷா சந்தித்துள்ளார்.

'எனவே, இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, அவருக்கு, 15 லட்சம் ரூபாயை இழப்பீடு வழங்க வேண்டும்' என, காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us