sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நடிகை கஸ்துாரிக்கு நிபந்தனை ஜாமின்; சென்னை எழும்பூர் கோர்ட் உத்தரவு

/

நடிகை கஸ்துாரிக்கு நிபந்தனை ஜாமின்; சென்னை எழும்பூர் கோர்ட் உத்தரவு

நடிகை கஸ்துாரிக்கு நிபந்தனை ஜாமின்; சென்னை எழும்பூர் கோர்ட் உத்தரவு

நடிகை கஸ்துாரிக்கு நிபந்தனை ஜாமின்; சென்னை எழும்பூர் கோர்ட் உத்தரவு

9


ADDED : நவ 21, 2024 02:37 AM

Google News

ADDED : நவ 21, 2024 02:37 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தெலுங்கர் குறித்து அவதுாறாக பேசியதாக கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்துாரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 3ம் தேதி, சென்னை எழும்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்துாரி, தெலுங்கர் குறித்து சர்ச்சையான கருத்துகளை பேசினார். இதனால், அவர் மீது கலவரத்தை துாண்ட முயற்சி செய்தல் உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, ஹைதராபாத்தில் இருந்த கஸ்துாரியை கைது செய்த போலீசார், சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இதையடுத்து, கஸ்துாரிக்கு ஜாமின் வழங்கக் கேட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு நீதிபதி தயாளன்முன் விசாரணைக்கு வந்தது. கஸ்துாரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் 'கஸ்துாரிக்கு, 12 வயதில், ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மகன் உள்ளார். அவரை கவனித்துக் கொள்ள வேறு நபர்கள் இல்லாததால், உடனே ஜாமின் வழங்க வேண்டும்' என, வாதிட்டனர்.

இதற்கு போலீஸ் தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து, கஸ்துாரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிபதி மனைவிவேண்டுகோள்:


முன்னதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மனைவியும், மாற்றுத்திறனாளிகளுக்கான, 'சக் ஷம்' என்ற அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவருமான காமாட்சி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

நடிகை கஸ்துாரிக்கு 'ஆட்டிசம்' பாதிப்போடு ஒரு மகன் உள்ளார் என்றும்,அவர் ஒரு தனி மனுஷியாகஅக்குழந்தையை போராடி வளர்த்து வருகிறார்என்பதையும் அறிந்து கொண்டேன்.

இப்பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கும், அவர்தம் பெற்றோருக்கும் அன்றாட வாழ்க்கை என்பதே, ஒரு நித்திய சவால். நானும் கஸ்துாரியை போல ஒரு சிறப்பு அம்மா தான். எனக்கும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மகன் இருக்கிறான்.

அதனால், கஸ்துாரி விஷயத்தில் வேண்டுகோள் விடுக்க தோன்றுகிறது. ஜாமின் விஷயத்தில், நீதிமன்றங்கள் குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு கருணையோடு அணுக வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

ஒரு மாற்றுத்திறனாளியின் தாயாக, கஸ்துாரிக்கு என் உடன் நிற்றலையும் தார்மீகக் கடமையாக நினைக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us