sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செயின்ட் கோபெய்ன் ஆலை ஒரகடத்தில் கட்டுமானம் துவக்கம்

/

செயின்ட் கோபெய்ன் ஆலை ஒரகடத்தில் கட்டுமானம் துவக்கம்

செயின்ட் கோபெய்ன் ஆலை ஒரகடத்தில் கட்டுமானம் துவக்கம்

செயின்ட் கோபெய்ன் ஆலை ஒரகடத்தில் கட்டுமானம் துவக்கம்


ADDED : ஆக 14, 2025 12:56 AM

Google News

ADDED : ஆக 14, 2025 12:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:செயின்ட் கோபெய்ன் இந்தியா நிறுவனம், சென்னையை அடுத்த ஒரகடத்தில் அமைந்துள்ள புதிய ஆலையில், கண்ணாடி உற்பத்தி மற்றும் இன்சுலேஷன் பிரிவுகளுக்கான கட்டுமான பணிகளை துவங்கியுள்ளது.

கிட்டத்தட்ட 3,400 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. முதல்வர் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

கிட்டத்தட்ட 122 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த உலக வளாகத்தில், கண்ணாடி இழை, ஜிப்சம் பூச்சு பலகைகள், பூச்சுகள், ப்ளோட் கிளாஸ் எனும் மிதவைக் கண்ணாடி, சோலார் கண்ணாடி, பசை உட்பட பல பொருட்களை உற்பத்தி செய்வதற்கான வசதிகள் இருக்கும்.

புதிய ப்ளோட் கிளாஸ் பிரிவு, நாள் ஒன்றுக்கு 1,000 டன் உற்பத்தித் திறனைக் கொண்டதாகும். இந்த ஆலை முழுதுமாக செயல்பாட்டுக்கு வந்ததும், இப்பகுதியில் 1,100 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us