sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெஞ்சல் புயலால் ஒரே நாளில் 3,500 மெகா வாட் சரிவு

/

பெஞ்சல் புயலால் ஒரே நாளில் 3,500 மெகா வாட் சரிவு

பெஞ்சல் புயலால் ஒரே நாளில் 3,500 மெகா வாட் சரிவு

பெஞ்சல் புயலால் ஒரே நாளில் 3,500 மெகா வாட் சரிவு


ADDED : டிச 01, 2024 12:35 AM

Google News

ADDED : டிச 01, 2024 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக மின் நுகர்வு தினமும் சராசரியாக, 15,000 மெகா வாட்டாக உள்ளது. கோடை வெயிலால், இந்த ஆண்டு மே, 2ல், 20,830 மெகா வாட்டாக, மின் நுகர்வு அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது.

மற்ற மாவட்டங்களை விட, சென்னையில் மின் நுகர்வு அதிகம் உள்ளது. தினமும் சராசரியாக, 2,800 - 3,000 மெகா வாட்டாக உள்ளது.

இந்நிலையில், 'பெஞ்சல்' புயலால், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில், நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல தொழில் நிறுவனங்கள் செயல்படவில்லை. வீடுகளிலும் மின் பயன்பாடு குறைந்துள்ளது.

பலத்த காற்று வீசும் இடங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சென்னையின் மின்நுகர்வு நேற்று, 1,500 மெகா வாட் குறைந்தது. மாநிலம் முழுதும் ஒட்டுமொத்த மின் தேவை, 3,500 மெகா வாட் அளவுக்கு குறைந்து, 11,500 மெகா வாட் என்றளவில் சரிவடைந்து உள்ளது.






      Dinamalar
      Follow us