sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பழனிசாமி மீதான தயாநிதி வழக்கு ரத்து

/

பழனிசாமி மீதான தயாநிதி வழக்கு ரத்து

பழனிசாமி மீதான தயாநிதி வழக்கு ரத்து

பழனிசாமி மீதான தயாநிதி வழக்கு ரத்து


ADDED : ஏப் 26, 2025 01:56 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பழனிசாமிக்கு எதிராக தயாநிதி தாக்கல் செய்த அவதுாறு வழக்கை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கடந்தாண்டு லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது, 'தி.மு.க., -- எம்.பி. தயாநிதி மாறன், அவருடைய தொகுதி நிதியை முழுமையாக செலவு செய்யவில்லை' என, குற்றஞ்சாட்டினார்.

பழனிசாமியின் பேச்சு, தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, அவர் மீது தயாநிதி அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.

சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பழனிசாமி மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பழனிசாமி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்த வழக்கு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பழனிசாமிக்கு எதிரான அவதுாறு வழக்கை ரத்து செய்தார். வழக்கில் விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us