'தினமலர் - பட்டம்' இதழ் படைப்பாற்றலை வளர்க்கிறது கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளி முதல்வர் நடராஜன் 'பளீச்'
'தினமலர் - பட்டம்' இதழ் படைப்பாற்றலை வளர்க்கிறது கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளி முதல்வர் நடராஜன் 'பளீச்'
ADDED : அக் 31, 2025 02:40 AM

கடலுார்:  கடலுார் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்கு 'தினமலர்' நாளிதழ் முக்கிய பங்கு வகிக்கிறது என, கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் நடராஜன் பேசினார்.
கடலுார் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த வினாடி வினா போட்டி துவக்க விழாவில், அவர் பேசியதாவது:
'தினமலர்' நாளிதழ் நடத்தும் அனைத்து கல்வி சார்ந்த செயல்பாடுகளிலும் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளி பங்கு வகிக்கிறது. 'தினமலர்' பட்டம் இதழ் வினாடி வினா நிகழ்ச்சி, 7வது ஆண்டாக இங்கு நடத்தப்படுகிறது. 75வது ஆண்டு பவள விழா கொண்டாடும் 'தினமலர்' நாளிதழுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சி என்று கேட்டால், பொறுப்புணர்வுவோடு செயல்படக்கூடிய 'தினமலர்'  நாளிதழ் தான்.  நல்ல விஷயங்களை பாராட்ட 'தினமலர்' தவறியதில்லை. மக்களுக்கான தலைசிறந்த இதழாக 'தினமலர்' உள்ளது.
'தினமலர்-பட்டம்' இதழ் மூலமாக இப்பள்ளி நான்கு சாதனைகளை படைத்துள்ளது. குறிப்பாக, இப்பள்ளி மாணவர்கள் 4 பேர், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் மாநில அளவிலும், தேசிய அளவிலும் நடந்த செஸ் போட்டியில் பங்கேற்றனர்.
புத்தகம் எழுதுவது சாதாரண விஷயம் கிடையாது. இப்பள்ளி மாணவர்கள் 3 பேர் புத்தகம் எழுதும் அளவிற்கு நுால் ஆசிரியர்களாக உருவாகியுள்ளனர். இவர்கள் எழுதிய புத்தங்களை தேசிய விருது பெற அனுப்பியுள்ளோம்.
இதற்கு காரணமும் 'தினமலர்' பட்டம் இதழ் தான். 'தினமலர்' கதை எழுதவும், கவிதை வாசிக்கவும் செய்கிறது. படைப்பாற்றல் திறனை வளர்க்கிறது.
இப்பள்ளி மாணவர்களில் 9 பேர் 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லுாரியில் சேர்ந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் தினமலர் நடத்திய 'நீட்' மாதிரி தேர்வு தான். இப்பள்ளியின் கல்வி வளர்ச்சியிலும் தினமலர் உறுதுணையாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கல்வியில் பின்தங்கிய கடலுார் மாவட்டத்தை 10வது இடத்திற்கு முன்னேற செய்ததில் 'தினமலர்' பங்கு வகிக்கிறது.
இவ்வாறு முதல்வர் நடராஜன் பேசினார்.

