sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க., வட்ட செயலர் மதுரையில் வெட்டி கொலை

/

தி.மு.க., வட்ட செயலர் மதுரையில் வெட்டி கொலை

தி.மு.க., வட்ட செயலர் மதுரையில் வெட்டி கொலை

தி.மு.க., வட்ட செயலர் மதுரையில் வெட்டி கொலை

1


ADDED : ஜன 28, 2024 11:37 PM

Google News

ADDED : ஜன 28, 2024 11:37 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, ஜன. 29-

மதுரை, ஜெய்ஹிந்த்புரம், எம்.கே.புரத்தை சேர்ந்தவர் திருமுருகன், 43; மதுரை மாநகராட்சி 7வது வட்ட தி.மு.க., செயலர். நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்னையே கொலைக்கு காரணம் என, தெரிந்தது.

அவரது மருமகன் ராஜா, அவரது மனைவி நந்தினி உள்ளிட்டோரிடம் ஜெய்ஹிந்த்புரம் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் விசாரிக்கிறார்.

போலீசார் கூறியதாவது:

திருமுருகனின் சித்தப்பா மகன் தவக்குமார். இருவரும், 2009ல் நடந்த ஒரு கொலை வழக்கில் கைதாகி பின் விடுதலை செய்யப்பட்டனர். தவக்குமார் மகள் நந்தினி, மைனராக இருந்தபோது, ராஜா திருமணம் செய்தார்.

இதுகுறித்து, திருமுருகன் புகாரில், 'போக்சோ' சட்டத்தில் ராஜா கைது செய்யப்பட்டார். இதில் இருந்தே இருவருக்கும் மோதல் உருவானது.

நந்தினி சகோதரிக்கும் திருமணம் நடந்தது. நாளடைவில் திருமுருகன் தலையீட்டால், அவரது வீட்டிலும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் திருமுருகன் மீது ராஜா, நந்தினி ஆத்திரத்தில் இருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு திருமுருகன் வீட்டின் கதவை தட்டி, அவரை வெளியே வரச்செய்து வெட்டிக்கொலை செய்துள்ளனர். அவர்களிடம் விசாரிக்கிறோம். இறந்த திருமுருகனுக்கு மனைவி, இரண்டு மகள்கள், மகன் உள்ளனர். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us