sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேர்தலை சந்திக்க கனிமவளக் கொள்ளை கும்பலை நம்பும் தி.மு.க.,: அண்ணாமலை தாக்கு

/

தேர்தலை சந்திக்க கனிமவளக் கொள்ளை கும்பலை நம்பும் தி.மு.க.,: அண்ணாமலை தாக்கு

தேர்தலை சந்திக்க கனிமவளக் கொள்ளை கும்பலை நம்பும் தி.மு.க.,: அண்ணாமலை தாக்கு

தேர்தலை சந்திக்க கனிமவளக் கொள்ளை கும்பலை நம்பும் தி.மு.க.,: அண்ணாமலை தாக்கு

17


ADDED : ஜன 24, 2025 05:45 PM

Google News

ADDED : ஜன 24, 2025 05:45 PM

17


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: '' 2026 சட்டசபைத் தேர்தலில் தோல்வி உறுதி என்பதை அறிந்து பணத்தை வாரி இறைக்க முடிவு செய்துள்ள தி.மு.க., கனிமவளக் கொள்ளைக் கும்பலின் வசூலைத் தான் நம்பி இருக்கிறது,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில், ஆளும்கட்சி ஆசி பெற்ற புதுக்கோட்டை 'கேங்க்' வசூல்வேட்டை நடத்தும் நிலையில், கரூர் 'டீம்' மீண்டும் களமிறங்கி உள்ளதால் கனிம வள தொழிலே ஆட்டம் கண்டுள்ளது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.(https://www.dinamalar.com/news/premium-news/steal-minerals-run-a-separate-empire-the-atrocities-of-the-pudukkottai-and-karur-gangs-are-at-their-peak-/3837837)

இந்நிலையில், இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகம் முழுவதுமே. கனிமவளங்கள் கொள்ளைப்போவது தொடர்கதை ஆகியிருக்கிறது. திமுகவின் ஆசியுடன், கரூர் கேங், புதுக்கோட்டை கேங் என இரு கும்பல்கள் தலைமையில், தமிழகம் முழுவதும் கனிமவளங்களைக் கடத்தி, கேரளாவுக்கு விற்றுக் கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்த மேற்குத் தொடர்ச்சி மலையையுமே அழித்துவிட்டுத்தான் ஓய்வார்கள் என்பது போல அவர்கள் நடவடிக்கை இருக்கிறது.

கனிமவளக் கொள்ளையைப் பற்றி புகார் அளித்து வீடு திரும்பும் முன் கொள்ளையர்களுக்கே புகாரைக் கசியவிட்டு, சமூக ஆர்வலர்களின் உயிரைப் பறிக்கும் வகையில் ஒரு காட்டாட்சியை நடத்தி வருகிறது இந்த பேரழிவு மாடல் திமுக அரசு.ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும்போதும், தமிழகத்தைச் சுரண்டுவதையே தொழிலாக வைத்திருக்கிறது திமுக. தமிழகம் முழுவதும் மலைகளை மணலைத் திருடி, கனிம வளங்களைச் உடைத்து, சுரண்டி, எதிர்காலத்தில் தமிழகத்திற்கு பருவமழை வருவதையே கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கிறது திமுக அரசு.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், தங்கள் தோல்வி உறுதி என்பதை அறிந்து, தேர்தலின்போது, பணத்தை வாரி இறைக்க முடிவு செய்திருக்கும் திமுக, அதற்காக, பொதுமக்களையும், கனிமவளக் கொள்ளையை எதிர்ப்பவர்களையும் அச்சுறுத்தி, மிரட்டி. கொலையும் செய்து, கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் இந்தக் கொள்ளைக் கும்பலின் வசூலைத்தான் நம்பியிருக்கிறது என்பது, கனிமவளக் கொள்ளையை திமுக அரசு கண்டும் காணாமல் இருப்பதில் இருந்தே தெளிவாகத் தெரிகிறது.

வரும் 2026ம் ஆண்டு, தமிழகத்தில் தேஜ கூட்டணி ஆட்சி அமையும்போது இந்த பேரழிவு மாடல் திமுக ஆட்சியின் கனிமவளக் கொள்ளையர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருக்கும் திமுக.,வினர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, கனிமவளக் கொள்ளை மூலம் அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் அத்தனைச் சொத்துகளும் மீட்கப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us