sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாநில கல்வி கொள்கையில் சந்தேகம்: பிரின்ஸ் கஜேந்திரபாபு

/

மாநில கல்வி கொள்கையில் சந்தேகம்: பிரின்ஸ் கஜேந்திரபாபு

மாநில கல்வி கொள்கையில் சந்தேகம்: பிரின்ஸ் கஜேந்திரபாபு

மாநில கல்வி கொள்கையில் சந்தேகம்: பிரின்ஸ் கஜேந்திரபாபு


ADDED : ஆக 21, 2025 10:49 PM

Google News

ADDED : ஆக 21, 2025 10:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'தமிழக அரசு வெளியிட்ட மாநில பள்ளிக்கல்வி கொள்கை, வரைவா அல்லது இறுதி வடிவமா என்பதை, பள்ளிக்கல்வி துறை தெளிவுபடுத்த வேண்டும்' என, பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வி துறை செயலருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம்:

தமிழக அரசு அமைத்த உயர்மட்ட குழு பரிந்துரைகளின் அடிப்படையில், மாநில பள்ளிக்கல்வி கொள்கை உருவாக்கப்பட்டது. அது, கொள்கையின் தொடக்க வரைவு தான். தொடர்ந்து கருத்துக்களை பெற்று மேம்படுத்தப்படும் என, ஆக., 12ம் தேதி வெளியான, உங்களின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அது உண்மை எனில், உயர்மட்ட குழு அறிக்கையை வெளியிட்டு, மாநில கல்விக் கொள்கை வரைவா அல்லது இறுதி வடிவா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

காரணம், அந்த குழுவில் இருந்தவர்களில் பலர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, சமமான கற்றல் வாய்ப்பு, அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று போராடியவர்கள். அப்படிப்பட்டவர்கள், இப்படிப்பட்ட பரிந்துரைகளை தந்தால், அதை பொதுவெளியில் வெளியிட வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us