sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் நாளை ஏவப்படுகிறது

/

புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் நாளை ஏவப்படுகிறது

புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் நாளை ஏவப்படுகிறது

புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் நாளை ஏவப்படுகிறது


ADDED : ஜூலை 29, 2025 05:42 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான, 'நாசா' உடன் இணைந்து, 'நிசார்' என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது.

இது, 12 நாட்களுக்கு ஒரு முறை, பூமியை அங்குலம், அங்குலமாக படம் பிடித்து, கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும். இந்த செயற்கைக்கோளை சுமந்தபடி, ஜி.எஸ்.எல்.வி., - எப் 16 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, நாளை மாலை, 5:40 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

இதற்கான, 27 மணி நேரம் 30 நிமிடங் களுக்கான, 'கவுன்ட் டவுன்' இன்று பிற்பகல், 2:25 மணிக்கு துவங்குகிறது.

ராக்கெட் எரிபொருள், செயற்கைக்கோள் என, மொத்தம், 420.50 டன் எடையை சுமந்தபடி விண்ணில் பாய உள்ளது.






      Dinamalar
      Follow us