sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கற்கும் கல்வி சமூகத்திற்கு பயன் அளிக்க வேண்டும்: ஜனாதிபதி முர்மு அறிவுரை

/

கற்கும் கல்வி சமூகத்திற்கு பயன் அளிக்க வேண்டும்: ஜனாதிபதி முர்மு அறிவுரை

கற்கும் கல்வி சமூகத்திற்கு பயன் அளிக்க வேண்டும்: ஜனாதிபதி முர்மு அறிவுரை

கற்கும் கல்வி சமூகத்திற்கு பயன் அளிக்க வேண்டும்: ஜனாதிபதி முர்மு அறிவுரை


ADDED : செப் 04, 2025 12:23 AM

Google News

ADDED : செப் 04, 2025 12:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாரூர்: ''மாணவர்கள் கற்கும் கல்வி, சமூகத்திற்கு பயன் அளிப்பதாக இருக்க வேண்டும்,'' என, ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.

திருவாரூர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நேற்று, 10வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில், மாணவ, மாணவியருக்கு, பதக்கங்கள் வழங்கி, ஜனாதிபதி முர்மு பேசியதாவது:

கடந்த, 14 ஆண்டு கால செயல்பாட்டில் லட்சத்தீவு முதல், லடாக் வரையிலான மாணவர்கள், இந்த பல்கலைக்கழகத்தில் படித்து வருவதன் மூலம், இந்தியாவின் பன்முகத் தன்மையை, பல்கலைக்கழகம் பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறது.

பல்கலை கழகத்தில் படிக்கும், 3,000 மாணவர்களில், அதிக அளவில், பெண்கள் கல்வி பயில்வதும், மூன்றில், இரண்டு பங்கு பெண்கள் தங்கப்பதக்கம் பெற்று இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.

மாணவர்கள் கற்கும் கல்வி, சமூகத்திற்கு பயன் அளிப்பதாக இருக்க வேண்டும். எனவே, மாணவர்கள், தாங்கள் கற்ற கல்வியை, அறிவியல் தொழில் நுட்பம், இயற்கை மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு, மனிதகுல மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்.

இன்றைய, 'டிஜிட்டல்' உலகத்தில் கற்பதற்கு பல வழிகள் இருக்கின்றன. முன்பை விட, நம் பாரம்பரியத்தை அறிந்து கொள்வது, நிகழ்கால தலைமுறைக்கு எளிமையாக உள்ளது. இதை தான், தேசிய கல்விக்கொள்கை மையமாக கொண்டுஉள்ளது.

பாரம்பரியம் மற்றும் நவீனத்தின் சிறப்பு அம்சங்களை ஒன்றாக கொண்டு, தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த, 20 ஆண்டுகளில், இணைய புரட்சி, உலகில் பல தொழில்களை உருவாக்கியுள்ளது.

இவ்வாறு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.

விழாவில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், தமிழக முதல்வர் பிரதிநிதியாக அமைச்சர் கீதாஜீவன், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us